Saturday, September 29, 2007

பிடித்த நல்ல வாக்கியங்கள்

மனிதனின் ஆசைக்கு உலகில் போதுமானது இருக்கிறது. ஆனால் மனிதனின் பேரசைக்கு போதுமானது உலகில் இல்லை.
               --காந்தியடிகள்


இறைவன் பெயரை உச்சரிக்கும் உதடுகளைவ்விட, மனிதனுக்கு சேவை செய்யும் கைகள் புனிதமானவை.
               --அன்னை தெரசா


சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் வாழ்க்கை ஒரு முடிவை எடுத்துவிடும்.
               --கோஸ்ட் ரைடர் ஆங்கில திரைப்படம்


எந்த பொருளின் மீது உனக்கு ஆசை இல்லையோ அந்தப் பொருளினால் உனக்கு துன்பம் இல்லை.
               --புத்தர்


உங்கள் கவுரவம் உங்கள் நாக்கின் நுனியில் இருக்கிறது.

கண்களைவிட கண்ணிருக்கு அதிக மதிப்புண்டு, கண்கள் மனிதனை காட்டும் கண்ணிர் மனிதனின் உள்ளத்தைக்காட்டும்.

உன்னிடம் பிறர் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று நீ நினைக்கிறாயே, அது போல் நீ பிறரிடம் நடந்துக்கொள்.

உன் அருமை தெரியாத இடத்தில் நீ இருந்தால், உன் பெருமை யாருக்கும் தெரியாது.
               --பெரியார்


நண்பர்களுடன் எப்பொதும் விவாதம் செய்யாதே, ஏன்னென்றால் அதில் நீ தோற்றால் ஒரு நண்பனை இழப்பாய், ஜெய்த்தால் ஒரு எதிரியை பெருவாய்.

உறவுகள் முறிந்தாலும், நினைவுகள் முறிவுவதில்லை.

மனிதனின் உயர்வு இதயத்தை பொருத்ததே தவிர, அறிவைப் பொருத்ததன்று.
               --காந்தியடிகள்


பணம் மோசமானது அல்ல, மோசமான எண்ணங்கள் கொண்ட மனிதர்களிடம் இருக்கும் பணம் தான் மோசமானது.
               --சுப. வீரபாண்டியன்

2 comments:

Divya said...

\\நண்பர்களுடன் எப்பொதும் விவாதம் செய்யாதே, ஏன்னென்றால் அதில் நீ தோற்றால் ஒரு நண்பனை இழப்பாய், ஜெய்த்தால் ஒரு எதிரியை பெருவாய்.\\

ஒரு நண்பனை இழப்பது வேதனையான விஷ்யம்.

அருமையாக தொகுத்து வழங்கியிருக்கிறீங்க உங்களுக்கு பிடித்த வாக்கியங்களை, பாராட்டுக்கள்.

தினேஷ் said...

திவ்யா,

மிக்க நன்றி