Monday, November 12, 2007

வார்த்தைப் பொறிகளில் நெறிகள்


  1. வதந்தி பேசாதீர்கள். அந்த நேரங்களில் மெலிதாய் புன்னகையுங்கள். புன்னகைத்துக் கொண்டே நடையை கட்டுங்கள்

  2. உங்கள் அருகில் வம்பு பேச உங்களுக்கு கீழ்உள்ளர்களை அனுமதிக்காதிர்கள்

  3. அடுத்தவரின் உணர்வுகளை அங்கீகரியுங்கள்

  4. மற்றவரின் கருத்துக்களை மதித்து கேளுங்கள்

  5. அவர்கள், குரலை உயர்த்திக் கருத்து சொல்ல அனுமதியுங்கள்

  6. எதிராளி முட்டாள்தனமாய் பேசினாலும், அவர் புத்திசாலிதனமாக பேசுவது போல் உற்று கேளுங்கள்

  7. மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களால் உங்கலுக்கு பாதிப்பு இல்லையென்றால் அதை ஒப்புக்கொள்ளுங்கள்

  8. யாருடைய சுயமரியாதைக்கும் சவால் விடாதீர்கள்

  9. எதிராளியுடனான பேச்சில் உங்களுக்கு பயங்கர கோபம் ஏற்பட்டால் உடனே அந்த இடத்தை விட்டு விரைந்து விடுங்கள்

  10. உண்மை எல்லா இடங்களில் உதாவது என்பதை உணருங்கள்

  11. மற்றவரிகளின் தகுதியை எடை போடாதீர்கள். அது பெரும்பாலும் தவறாக இருக்கும்

  12. எப்போதும் மகிழ்ச்சிகரமாக இருப்பதாக காட்டி கொள்ளுங்கள்

  13. விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்

  14. அந்தரங்கமான விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்

  15. ஒருவரைப் பற்றிய உங்களின் அபிப்பிராயத்தை எக்காரணம் கொண்டும் அடுத்தவரிடம் சொல்லாதீர்கள்

  16. மற்றவர்களை புகழ்வதற்கென்று தினமும் நேரம் ஒதுக்குங்கள்

  17. தாழ்வு மனப்பான்மையுடன் எந்த செயலையும் அனுகாதிர்கள்

  18. கிண்டல் மற்றும் கெட்டவார்த்தைகளை உச்சரிப்பதை தவிருங்கள்

  19. முக்கியமான விசயங்களை பேசுவதற்கு முன்பு கொஞ்சநேரம் ரிலாக்ஸ் செய்யுங்கள்

  20. உங்கள் எதிர்கால லட்சியத்தை பற்றி வாய்விட்டு அதிகமாக பேசாதீர்கள்

  21. உங்களின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதாவது ஒரு நோக்கமிருக்கும் என்று மற்றவர்களை நம்ப செய்யுங்கள்

  22. எதிராளி எப்படி பதில் பேசுவான் என்பதை கற்பனையில் சொல்லிப் பாருங்கள்

  23. குற்றச்சாட்டை பகிரங்கப்படுத்தாதீர்கள்

  24. கொஞ்சம் மெதுவாக உரத்தக் குரல் இல்லாமல் பேசுங்கள்

  25. பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்

  26. விட்டுக்கொடுங்கள்