Sunday, September 30, 2007

என் கவிதைகள்

வணக்கத்தோடு வரவேற்க்கிறேன்,

என்னுடைய சிந்தனைகள் சிலவற்றை கவிதையாக எழுத முயற்சித்திருக்கிறேன். தங்களுக்கு நேரம் இருந்தால் படியுங்கள்...

நன்றி
..................................................................................

                         மனிதனைத்தேடி...

மனிதனை
ஜாதி வைத்து
பிரித்துப்பார்க்கின்றன
மிருங்கங்கல்...!

----------------------------------------------------------------------------------

காலத்தின் வேகத்தில்
காணாமல் போன
பறவைகளின் சிறகுகள்
உதறிவிட முடியாத
உறவுகள்...

----------------------------------------------------------------------------------

முகம் முடி பிறக்கிறான்
முகமூடிக்கலுடன் வாழ்கிறான்
முகம்க்காட்டி மறைக்கிறான்
முடிகிறான் மனிதன்...

----------------------------------------------------------------------------------

உணர்வுகள்
உயிரோடு கொள்ளப்படுக்கின்றன
...
...
சிறுவன்
சிக்னலில் பிச்சையை
எடுக்கும் போது...

----------------------------------------------------------------------------------

சாலை ஒரத்தில்
வாழ்க்கிறானா?
சட்டென்று திரும்பிப்பார்த்தேன்
வாழ்வது அவனில்லை
வறுமை...

----------------------------------------------------------------------------------

தான் வாழ
பிறர் வீழ
சாலைகளில்
விழ்ந்துக்கிடக்கின்றன-ஐந்தறிவு
மனிதன் உடைத்த
பூசணிக்காய்கள்...

----------------------------------------------------------------------------------

உன்
நலனில்-நான்
என்
நலனில்-நீ
இப்படிக்கு
நம் காதல்...

----------------------------------------------------------------------------------

மனிதனை
மனிதன்-நேசிக்கிறான்
மறைந்ததிலிருந்து
மயானம் வரை...

----------------------------------------------------------------------------------

மதம் மூன்றிலும்
மனிதநேய மனிதர்களை ஏற்க
மறுப்பதில்லை - ஆனால்
மறுக்கிறார்கள் மூன்று நல்ல
மத கடவுள்களையே ஏற்க!
மதம் பிடித்த
மனிதர்கள்...

----------------------------------------------------------------------------------

உன்னை மறந்திருந்தால்
இறந்திருப்பேன் என்கிறது
என் இதயம்!
இறந்திருந்தாலும் உன்னை
பார்த்திருப்பேன் என்கிறது
என் இருவிழிகள்!
கண்களை தானம் செய்யச்சொல்லி...

----------------------------------------------------------------------------------

இருந்தும் இரக்கம்
இல்லாதவர்களா
இரக்கம் இருக்கின்ற
இல்லாதவர்களா
இருவரில் யார் நல்லவர்கள்?
இறுக்கமாய் சிந்திக்கிறேன்...

----------------------------------------------------------------------------------

கரம், சிரம், நிறம்
என
உன் அழகு-அத்தனையும்
புறம் இருந்தாலும்
என் காதல் மட்டும்
அகம்-ல் இருக்கிறது...

----------------------------------------------------------------------------------

வளர்த்த மகளை
வாழ்த்தி
வண்டி ஏற்றி
வழி அனுப்ப-கேட்க்கிறார்கள்
வரதட்ச்சனையாய்
வண்டி?

----------------------------------------------------------------------------------

பார்வையற்றவர்கள்
பாதைக்காட்டுக்கிறார்கள்
பார்வையிருந்தும்
பாதை தெரியாதவர்களுக்கு...

----------------------------------------------------------------------------------

வறுமை அதிகரிக்க
ஆடை கிழிந்திருக்கிறது
ஏழைகளுக்கு...

வரு’மானம்’ அதிகரிக்க
ஆடை கிழிந்திருக்கிறது
நடிகைகளுக்கு...

----------------------------------------------------------------------------------

இதயம்
கல் அறை ஆனதால்
கல்லறைகளில்
கல் அறைகளில்
மனிதன்...

----------------------------------------------------------------------------------

படித்தமைக்கு நன்றி பல...

11 comments:

நிலாரசிகன் said...

தங்கள் சிந்தனைச் சிதறல்கள் அனைத்தும் அருமை.

தமிழில் எழுத முயற்சியுங்கள் தோழரே.

வாழ்த்துக்கள்.

Divya said...

அருமையா எழுதுறீங்க,
வாழ்த்துக்கள்!

தொடர்ந்து எழுதுங்கள்!

தினேஷ் said...

நிலாரசிகன்,

தாங்கள் மற்றும் என் சகோதரரின் ஆலோசனைப்படி என் வலைப்பதிவை தமிழில் பதித்திருக்கிறேன். மிக்க நன்றி

தினேஷ்

தினேஷ் said...

திவ்யா,

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

தினேஷ்

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

// சாலை ஒரத்தில்
வாழ்க்கிறானா?
சட்டென்று திரும்பிப்பார்த்தேன்
வாழ்வது அவனில்லை
வறுமை...
//
அருமை

தினேஷ் said...

சதிஷ்,

மிக்க நன்றி...

தினேஷ்

Divya said...

தமிழ் மணத்தில் இணைந்திருப்பதை அறிந்து மகிழ்ந்தேன், வாழ்த்துக்கள்!

Divya said...

தினேஷ்,
Commment Moderation செய்யலாமே??

தினேஷ் said...

Commment Moderation செய்து இருக்கிறேன். உங்கள் ஆலோசனைக்கும் வாழ்த்துக்கு மிகமிக நன்றி...

கோவி.கண்ணன் said...

//வரு’மானம்’ அதிகரிக்க
ஆடை கிழிந்திருக்கிறது
நடிகைகளுக்கு...//

'நச்'....!

தமிழ் said...

/வளர்த்த மகளை
வாழ்த்தி
வண்டி ஏற்றி
வழி அனுப்ப-கேட்க்கிறார்கள்
வரதட்ச்சனையாய்
வண்டி?/

/வறுமை அதிகரிக்க
ஆடை கிழிந்திருக்கிறது
ஏழைகளுக்கு...

வரு’மானம்’ அதிகரிக்க
ஆடை கிழிந்திருக்கிறது
நடிகைகளுக்கு.../

அழகான
உணர்ச்சி பூர்வமான
கவிதைகள்