Wednesday, March 19, 2008

உணராத உணர்வுகள்...


  1. பிணவறைக்கு கூட
    பணம் போனால் தான்
    பிணம் வருகிறது
    பணம்... மனம்???


  2. மனிதன் வாழ
    மதம் அன்று
    மதம் வாழ
    மனிதன் இன்று...


  3. பெண் பேசப்போகிறார்கள்
    பொன் பேசுகிறார்கள்
    பொன்னான மனிதர்கள்...


  4. சூரியனின் சூடுக்கூட
    சுடுவதில்லை ஏழைகுழந்தையின் பாதங்களுக்கு
    சுடுகிறது பசியின்
    சூடு வயிற்றில்...


  5. அன்பை போதிக்கிறது
    அனைவருக்கும் மதங்கள்
    அல்ல
    அரசு பொதுமருத்துவமனை...

11 comments:

sathish said...

Thalaipae arumai Dinesh!

varikalai parri naan koorathaevaiyillai!

கிருத்திகா said...

சூப்பர் தினேஷ், லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்க. கொஞ்சம் கனமான மனதை தந்தாலும் அதிலிருக்கும் உண்மை நெஞ்சை சுடத்தான் செய்கிறது. வாழ்த்துக்கள். தொடர்ந்து அதிகம் எழுதுங்கள்.

திகழ்மிளிர் said...

அருமையான வரிகள்

rahini said...

ennum niraiya eluthugkal
nalla pathivu
anpoodu
rahini

ரூபஸ் said...

யதார்த்த உண்மைகள்.. நல்லாயிருக்கு..

சகாரா said...

தினேஷ், ஐந்தும் ஐந்து முத்துக்கள்.

//சூரியனின் சூடுக்கூட
சூடுவதில்லை ஏழைகுழந்தையின் பாதங்களுக்கு
சூடுகிறது பசியின்
சூடு வயிற்றில்...//

கண்ணீர் தான் வந்தது.

அனைத்து படைப்புகளும் அருமை ;)எழுத்துப்பிழைகளை கொஞ்சம் கவனிக்கலாமே ;((

தினேஷ் said...

கருத்தும், வாழ்த்தும் கூறிய அனைவருக்கும் மிக்க நன்றி...

தினேஷ்

Divya said...

மனதை கணமாக்கும் வரிகள்....

மிக நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்!!

தினேஷ் said...

திவ்யா,

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...

தினேஷ்

Thenmozhi said...

miga arumayana haikuu kavithaigal ..
ungalukku oru sabaash

தினேஷ் said...

தேன்மொழி,

உங்கள் கருத்துக்கும் மற்றும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

தினேஷ்